கலைஞருக்கு கலைஞனின் வாழ்த்து..

திராவிட முன்னேற்ற கழக தலைவர் கலைஞர் திரு.மு. கருணாநிதி அவர்களின் 83வது பிறந்த நாளில் , தன் தலைவரின் பிறந்த நாளை தன் கவிதை வரிகளால் வாழ்த்தி வணங்கி அழகு பார்த்திருக்கிறான். எனது தாய்மாமன் என்ற உறவையும் தாண்டி என் குடும்பத்து கவிஞர்களில் முதன்மையானவர் என்கிற வகையில் அவர் என் தனிப்பட்ட வணக்கத்துக்குரியவர். 1997 ம் ஆண்டு கலைஞரின் பிறந்த நாள் விழாவுக்காக பாம்பன் சங்கர் ( சங்கர் குமார் க) எழுதிய கவிதை.... நீண்ட காலத்துக்கு பிறகு இன்றுதான் கிடைத்தது... இதோ...... முத்தமிழ் அறிஞரே.. முத்துவேலர் மைந்தரே... தமிழ்தாயின் தலைமகனே.. தமிழினத்தின் தலைவனே.. உண்மைக்கு எதிரான சக்திகளை உடைதெறிந்த உத்தமனே... ஆதிக்க நெறியோர்க்கும் அதிகார வெறியோர்க்கும் அச்சுறுத்தல் நீரே... ஏழைகளின் இதய துடிப்பு அறிந்தவர் நீரே.. இதயத்து இன்னல்கள் களைந்தவர் நீரே.. சங்கத்தமிழ் சங்கமிக்கும் உன் நாவினிலே.. சத்தியம் தவறாமை காணுகையில் தமிழன்னையே.. தவமிருந்து பெற்ற தலைமகன் நீர் என்று தெளிவாயிற்று... கருணையும் நீதியும் பெயரிலே இணையப்பெற்றது உன் பிறப்பின் சிறப்பாயிற்று... அரியணை அமர்ந்து நீ ஆற்றிய பணி.. அ...