இடுகைகள்

ஏப்ரல், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கூடிய விரைவில் சாகப் போகிறேன்

கூடிய விரைவில் சாகப்போகிறேன்   தேதியும் முடிவில்லை -நான் பாடிய கவிகள் எதுவும் எனக்கு   திருப்தியும் தரவில்லை ஆடிய ஆட்டம் அடங்கிடும்வேளை    அரங்கம் திறக்கிறது - அங்கே தேடிய பொருளால் கூடிய உறவெனை     சுற்றிக் கிடக்கிறது. ஓடிய வேளை உடனிருந்த என்     நண்பன் ஒருபுரத்தில் வாடிய வேளை வருத்தம் துடைத்த     அன்பன் ஒருபுரத்தில் நாடிய நாயகி நாட்டுக்கழுகிற     நீலிக் கண்ணீர் ஒருபுரத்தில் - என் நீடிய கனவின் நீண்ட பயணத்தில்     நேரம் கழித்தவர் மறுபுறத்தில். சொல்லிச் சொல்லி அழுதிடுவார்க்கு     சோகம் அடைக்கிறதாம். முதல்நாள் விழுந்த பூவை பார்த்து     மொட்டுகள் அழுகிறதாம்.. எவரும் ஒருநாள் போவார் அதனை     உலகம் உணரட்டும் - உன் தவறும் சரியும் சாவோடு முடிவதை      மனமும் உணரட்டும்..