கூடிய விரைவில் சாகப் போகிறேன்
கூடிய விரைவில் சாகப்போகிறேன் தேதியும் முடிவில்லை -நான் பாடிய கவிகள் எதுவும் எனக்கு திருப்தியும் தரவில்லை ஆடிய ஆட்டம் அடங்கிடும்வேளை அரங்கம் திறக்கிறது - அங்கே தேடிய பொருளால் கூடிய உறவெனை சுற்றிக் கிடக்கிறது. ஓடிய வேளை உடனிருந்த என் நண்பன் ஒருபுரத்தில் வாடிய வேளை வருத்தம் துடைத்த அன்பன் ஒருபுரத்தில் நாடிய நாயகி நாட்டுக்கழுகிற நீலிக் கண்ணீர் ஒருபுரத்தில் - என் நீடிய கனவின் நீண்ட பயணத்தில் நேரம் கழித்தவர் மறுபுறத்தில். சொல்லிச் சொல்லி அழுதிடுவார்க்கு சோகம் அடைக்கிறதாம். முதல்நாள் விழுந்த பூவை பார்த்து மொட்டுகள் அழுகிறதாம்.. எவரும் ஒருநாள் போவார் அதனை உலகம் உணரட்டும் - உன் தவறும் சரியும் சாவோடு முடிவதை மனமும் உணரட்டும்..