இடுகைகள்

ஆகஸ்ட், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

I லவ் songs. பட் நாட் நவ் ( ஐ love சாங்ஸ்.but not now)

அந்தியில வானம். சுந்தரரே வாரும் சதிராட்டம் சிந்து படிக்கும்.... மாலை நேர காத்து வந்து வீச மச்சான் மேல ஆசை கொண்டு பேச.... எருக்கஞ்செடி யோரம் ...... தூதுவளை இலை அரைச்சு..டொய்ங்.. தொண்டயில தான் நனைச்சு.. டொய்ங். இன்னும் பல  இன்னும் பல இத்யாதி இத்யாதிகள் எல்லாம் ....... அடக் கடவுளே.... இந்த பஸ் ஒனர்களுக்கும் டிரைவர் கண்டக்க்றர்களுக்கும் வேற பாட்டுகளே கிடைக்காதா ? இல்ல. மத்த புது சினிமா பாட்டெல்லாம் போட்டா சாமிகுத்தமா ? அதெப்படி எல்லாரும் ஒரே மாதிரி டெம்ப்ளேட் வெச்சு பாட்டு போடுறாங்க..sobba.. அ.அ.அ. முடியல... இல்லப்பா அதெல்லாம் அவன் அவன் இஷ்டம்.அவன் அவனுக்கு புடிச்சத அவன் கேக்குறான் னு சொல்றீங்களா.. அப்போ நான் கேக்குறேன்... அவனுக்கு விருப்பமான பாட்ட கேக்குறதா இருந்தா அவன் வீட்ல போட்டுல்ல கேக்கணும்.எல்லாரும் இருக்குறப்ப கேட்டு எங்களையும் வெறுப்பேத்தி வெங்காயம் உரிக்கிறதா?.. Sorry ங்க. நா headset கொண்டு வர மறந்துட்டேன். அதான் இவ்ளோ புலம்பல்.ஆக உங்களுக்கெல்லாம் ஒரு சின்ன அனுபவ பாடம். ஊருக்கு போறப்ப headset மறக்காம எடுத்துட்டு போங்க.. சரி சரி பை. அடுத்த பாட்டு போட்டுட்டான்.. தி

விடிந்ததா?விடியலயா?

படம்
             வித்யாசமான தலைப்புகளை பார்க்கும்பொழுது வருகிற சிரிப்பை விட அலாதியான சுவாரஸ்யம் அப்படி ஒரு தலைப்பை  நேரடியாக நாமே சந்திப்பதில் இருக்கிறது. எடுத்துக்காட்டாக  "போங்கடி நீங்களும் ", "மொசரக்கட்டை","விரலா? வீக்கமா?" போன்ற தலைப்புகள் அந்த அனுபவத்தை ஏற்கனவே தந்தவை. அதே போன்ற தலைப்புதான் இதுவும் கூட.எதோ தூக்க கலக்கத்தில் 3 மணிக்கு எழுந்து கேட்கிற கேள்வியை தலைப்பாகவே தந்து விளையாடிய ஆவடி எழில் இலக்கிய பேரவைக்கு நன்றி. 13.08.17 அன்று ஆவை எழில் இலக்கிய பேரவை நடத்திய கவியரங்கத்தில் இடம்பெற்ற கவிதை. தலைப்பு:விடிந்ததா?விடியலயா? கேள்விகளை ஆகூதியாக்கி        விடைகளை பிராப்தம் பெற வேள்வி நடத்தும் பேரவையே ! வெடிவைத்து தகர்த்தாலும்     வெட்டுறாத பாறை-சிறு தட்டுளிக்கு  கட்டுப்  படும்             (அன்றேல்) பசுமரத்து வேரோடி      பலமான பாறைகூட பாதியாக வெட்டுப் படும். மரத்துக்கும் தோல்வி மலைக்கும் தோல்வி விடியல் யாருக்கு...... .? தானாக உடைந்ததை தனித்தனியே உடைத்தெடுத்து வியாபாரம் செய்பவர்க்கு விடியல் இது. விடிந்ததா ?விடியலயா? வாதையால் பிர

என்னை அறிந்தால்

படம்
என்னை அறிந்தால் ஒரு தடையும்  வழியில் இல்லை-இலக்காக விண்ணை அறிந்தால் காதல்முறிவு  காணாமல்போகும்-சரியாக பெண்ணை அறிந்தால் ஓடி ஓடி ஊர்முழுக்க சொத்து பத்து சேர்க்கமாட்டான் கடைசியான 6 அடி மண்ணை அறிந்தால் அறிதோறும் அறியாமை அறிந்தவர் யாரோ அறிவாளி அவரென்று அகிலம் சொல்லும்-இதை அறியாதார் மடையரென்றும் அதுவே சொல்லும். ஆடும் வரை ஆடிவிட்டு காடு தேடி ஓடும் கூடு என்ற உண்மை மட்டும் உணர்ந்திருந்தால் போதும். என்றும் அன்புடன் உங்கள் பாம்பன் மு பிரசாந்த் 

யார் இந்த தமிழ்மகன் குழந்தையா கொடுங்காற்றா

படம்