இடுகைகள்

2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை சரியா? - எஸ்.இராதாகிருஷ்ணன்

படம்
ஈழத்தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்பது நெடுங்காலமாக் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என சொல்லப்பட்டு வருகிறது. குடியுரிமைத் திருத்தச் சட்ட விவகாரத்திலும் அதே வார்த்தையை அதிமுக பயன்படுத்துகிறது. இது குறித்து வழக்கறிஞர் எஸ்.ராதாகிருஷ்ணன் சொல்வது கவனிக்கப்பட வேண்டியதும் கூட. அப்படி என்ன சொன்னார் அவர்.? ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை என்பது சரியா? எடப்பாடி பழனிச்சாமி நேற்று புதுடில்லியில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் கலந்துக் கொண்ட உத்தமர் காந்தியாரின் 150வது கொண்டாட்டத்தைக் குறித்தான ஆலோசனைக் கூட்டத்தில் ஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை குறித்துப் பேசியது சரியான நிலைப்பாடு இல்லை. ஈழத்தில் இருந்து 1980களில் வந்த அகதிகள் இந்தியாவில் பிரஜா உரிமையோடு தங்க விரும்பினால் அவசியம் இந்திய அரசு அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் மத்திய அரசு, ஈழ அகதிகள்  இலங்கைக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தால் தங்கிய கட்டணம் (staying charges) மத்திய அரசு வசூலிக்காமல் அவர்களை எளிமையாகவும் நிம்மதியாகவும் அவர்களை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஈழத்

ayodhya verdict | 1045 பக்க அயோத்தி தீர்ப்பின் சுருக்கமான வடிவம் | |Pamb...

படம்
  இந்திய அரசியல் சாசனத்தின் படி எல்லாம் சாத்தியமா? நீதிபதிகள் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவர்களா? இந்திய அரசியல் சாசனத்தின் கதையை படிக்க

SaveSurjith: A National cowardice

படம்
Fortunately or unfortunately. Do you live in a dark room for a day?  If yes, now just think that you are  at the age of 2. It’s unimaginable. Now add, that is not a room, it is a Borewell of depth above 300ft.  The State and central rescue forces are trying to save you but everything is happening at the top land.  You are alone inside for more than 60 hours. It’s really a hard thing to empathy ourselves to that  position. But it became true now near you.  Nadukkaattampatti a tiny village of manapparai taluk, Trichy is the talk of the nation right now. A  2-year-old kid named sujith Wilson fell into a bore well on Friday ( 25.10.19 ) evening at 5.45 pm.  After completing 48 hours of rescue efforts, till now ( 27.10.19 ) everyone in and around the spot is  waiting with a single expectation about the safe rescue of sujith.  But actually the ongoing rescue operations are appreciable when we see these an all from top land.  It’s actually towards 4th day. But

சதுப்பு நிலம் - முதல் புரிதலும் முழுப்புரிதலும்

படம்
சதுப்பு நிலம் - முதல் புரிதலும் முழுப்புரிதலும் சதுப்பு நிலங்களில் ஆக்கிரமிப்பு.. பாழாகும் சூழலியல். மீட்க வேண்டியது நம் கடமை. தமிழனா இருந்தா ஷேர் பண்னு.. சதுப்பு நிலங்களின் மீதான கவனம், பெருவாரியான மக்களுக்கு இப்படித்தான் அறிமுகமாகிறது. போகிற போக்கில், கடந்துவிடும் ஒரு வரிச்செய்தியில், ஒரு உலகம் அடங்கியிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? இதற்கு, முதலில் சதுப்பு நிலம் என்றால் என்ன என்பதை கற்க வேண்டும்.  இணையம் வழங்கும் தகவல்களின் படி, அது கடலும் அல்லாத நீர்நிலையும் அல்லாத ஆனால் ஈரப்பதமாகவே இருக்கும் நிலம் என்பதை புரிந்து கொள்ள முடியும்.. ஆனால், சதுப்பு என்ற பகுப்புக்குள் ஒரு பல்லுயிர்ச்சூழல் இருப்பதை பலசமயங்களில் நாம் கவனிப்பதில்லை. அல்லது கவனத்துக்கு வருவதில்லை… தோற்றத்தை பொறுத்தமட்டில் , முதலில் ஒன்றை தெளிவு பெறுவோம். சதுப்பு நிலம் என்பது நீர்நிலைகளுக்கான நீர்பிடிப்பு பகுதிகள் போன்றவைதான். உவர்நீர் மற்றும் நன்னீர் ஆகிய இரண்டு சதுப்பு பகுதிகள் உண்டு. இரண்டுமே  காய்ந்தால் உதிர்ந்து போகும் மண்கூட்டம்தான். ஆனால், தொடர் ஈரத்தால் நெருங்கியிருப்பதால் அவை சகதி போல காட்சியள

ஹே ராம் சொல்லிவிட்டுத்தான் இறந்தாரா காந்தி?

1948 , ஜனவரி 30. மகாத்மா காந்தி நாத்துராம் விநாயக் கோட்சே வால் சுட்டுக்கொலை செய்யபட்டார். இறக்கும் போது கடைசியாக அவர் சொன்ன வார்த்தை  “ஹே ராம்” என்பதுதான். நிஜமாகவே அப்படி சொல்லிவிட்டுத்தான் இறந்தாரா? என்பதில் இதுவரை ஆயிரம் சந்தேகங்கள்,ஆயிரம் கேள்விகள். ஆனால் விடை கிடைத்தபாடில்லை. காந்தியை தீவிரமான இந்து என்று காட்டுவதற்காக மட்டுமே அவர் ஹே ராம் என்றபடி இறந்தார் என்று தெரிவிக்கிறார்கள். காந்தியின் இறந்தவாயில் ராம் என்கிற சொல்லை திணித்துவிட்டார்கள். இது காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வெளிவந்த கோட்சேவின் தம்பி கோபால் கோட்சே ஒரு பேட்டியில் தெரிவித்தது. அப்படியென்றால் இறக்கும்போது ஹே ராம் என்று காந்தி சொல்லவில்லையா? இல்லை. அவர் சொல்லவே இல்லை. அது ஒரு தானியங்கி துப்பாக்கி.அதன் மேகசினில் 9 குண்டுகள் வைக்கலாம்.ஆனால் அந்த நேரம் 7 தான் இருந்தது. ஒருமுறை சுட்டால் அடுத்த நொடிப்பொழுதில் 7 குண்டுகளும் வெடித்துவிடும். அப்படி பாயும் குண்டுகள் முக்கியமான பகுதிகளை ( இதயம்,மூளை, மார்புப்பகுதி ) துளைத்துச்செல்லும் பொழுது முதலில் சுயநினைவை முற்றிலுமாக இழப்பீர்கள்.சக்தி இருக்காது. அன்று காலை  காந்