இடுகைகள்

கவிதைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வரட்டும் மழை

முகத்தில் துப்பட்டா கட்டாத முச்சந்தி முல்லைக்கு முகம்கழுவ, பொத்துக்கொண்டு கொட்டி புளியங்காய்களுக்கு போட்டிபோட்டுப் பொட்டு வைக்க, வேண்டுமென்றே அவனுக்கு அவள் ...

பிறப்புரிமை

பிறப்புரிமை பிறப்புரிமை என்றொன்று கிடையவே கிடையாது இருப்புரிமை ஒன்றுதான் இருப்பதெல்லாம்.. அப்பனுக்குள்ளே அடங்கியிருந்தேன் ஆண்டாண்டு காலங்களாய்.. உள்ளே "இருக்...

இயற்கை ( காடு - மாத இதழுக்காக )

    ............     இயற்கை  - காடு   ............. எழிலென்றும் பொழிலென்றும் எல்லோரும் பாராட்டும் அழகொன்றே இயற்கையெனில் அதுவும் தவறு. முகில்தூவி முல்லைக்கு முகம்கழுவும் அழகியலை முழு...

விருப்பம்

படம்
வேண்டாப் பொருளே என்றாலும்      இல்லை யென்றால் விருப்பம் ஆசை தீபம் அனையா தெரியத்      தூண்டுந் திரியே விருப்பம். ஆடவனின் வன்மைமேல்     அணங்குக்கு விருப்பம். அணங்கவளின் மென்மைமேல்     ஆண்மைக்கும் விருப்பம். நாற்காலி அடையமட்டும்     எல்லோர்க்கும் விருப்பம் நல்லாட்சி புரிவதற்கு     யாருக்கு விருப்பம்....... ஆசை வந்து தொலைத்து விட்டால்      அடையும் வரையில் விருப்பம் அவரிடமில்லா அனைத்தின்மீதும்      அவக் காச்சியாய் விருப்பம். ஐம்பது ரூபாயில் கண்ணதாசனின்  அழியாக்காவியம்     ஒட்டுமொத்த உலகம் இயங்க      ஒற்றை சூத்திரம் விருப்பம். உலகம் என்னும் நாடக மேடையில்      உயர்ந்த பாத்திரம் விருப்பம்.                                 -பாம்பன் மு.பி...

கவிதாஞ்சலி (கவிக்கோ)

படம்
மறைந்த ஐயா கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுக்காக கவிதை சிறகுகள் அமைப்பு நடத்திய கவிதாஞ்சலி கவிதை... மதம் கடந்து மனித பண்புகளோடு மல்லாந்த முகத்தோடு அனைவரையும் எதிர்கொள்ளும் பண்பாளர்.சிறந்த இலக்கிய வாதி ..ஆகச்சிறந்த கவிஞர்,பேச்சாளர்,எழுத்தாளர்,சிந்தனையாளர்,.. மொத்தத்தில் தமிழக இலக்கிய உலகில் முத்திரை பதித்து இருக்கக்கூடிய இலக்கிய ஆளுமை...என்போன்ற ரசிகர்களுக்கும் சரி, நல்ல ரசிகர்களுக்கும் சரி, இவர் படைப்புகள் தீனி போட்டு திருப்திப்படுத்தும் என்பதில் ஐயமில்லை ....      #  கவிதாஞ்சலி  பால்வீதி பார்க்க சென்ற      படைப்பாளி ஒருவருக்கு, கடவுளை காணச்சென்ற-என்        கவிதை கடவுளுக்கு  காதலாகி கசிந்துருகி       கண்ணீர் மல்க கவிதாஞ்சலி  தவிக்கும் மனதுக்கு     தாய்தமிழல் மருந்திட்டு  செவிக்கோர் விருந்தாக     தீந்தமிழை தந்தளிக்கும்   புவிக்கோர் நாயகன் என்      கவிக்கோவின்  காலடியில்  கண்ணீரை சேர்த்தவாறு...