இடுகைகள்

மே, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வடுக்களின் வரலாறு மின்நூல்

படம்
வடுக்களின் வரலாறு கவிதை தொகுப்பு                                                                                                   தரவிறக்குக/Download

ஸ்டெர்லைட் பாடம்

செய்தி 24 வழி வந்த ஸ்டெர்லைட் ஆலை பற்றிய குறிப்புகளைக் கீழே தருகிறேன். இதிலிருந்து நாம் பெறவேண்டிய செய்திகளைத் தருகிறேன். யோசித்து முடிவு செய்யவும். 1. பொதுவாக பொருளாதார அளவில் உலகை முதல் உலகு, மூன்றாம் உலகு எனப் பிரிப்பர். முதல் உலகின் மிகப்பெரிய சந்தை மூன்றாம் உலகு. இந்தச் சந்தையில் நுகர் பொருள் மட்டும் விற்பனை ஆவதில்லை. கழிவுகளும் அனுப்பப்படுகின்றன. பிரான்சின் அணு ஆலைக் கழிவுகள் எட்ட இருக்கும் பசிபிக் பாலினீசியத் தீவுகளுக்கு அனுப்பப் படுகின்றன. அமெரிக்காவின்  மின்கழிவுகள் (e-waste) சீனாவிற்கு அனுப்பப்படுகின்றன. 90 களில் ஜெர்மனியின் நெகிழிக் கழிவுகள் (plastic waste) சீனாவிற்கு அனுப்பப்பட்டு அங்கு பனிக்காலக் குளிருக்கு எரியூட்டப்பட்டன. நெகிழி எரியும் போது பல்வேறு நஞ்சுகள் காற்றில் கலக்கின்றன. இது பின்னால் பத்திரிக்கையில் வந்து அனுப்பிய கீல் நகர நகராட்சி பின்பு அடிவாங்கியது. பாடம்: மூன்றாம் உலகு தூங்கும் உலகு. சூழல் பற்றிய பிரக்ஞை இல்லாத உலகு. நானும் பார்த்துக் கொண்டுதான் வருகிறேன். இதுவரை நடந்த எந்தத் தேர்தலிலும் எந்தக்கட்சியும் சூழலை முன்னிலைப் படுத்தவில்லை. ஏற்கனவே ஜனத்தொகை நிரம்ப

இயற்கை ( காடு - மாத இதழுக்காக )

    ............     இயற்கை  - காடு   ............. எழிலென்றும் பொழிலென்றும் எல்லோரும் பாராட்டும் அழகொன்றே இயற்கையெனில் அதுவும் தவறு. முகில்தூவி முல்லைக்கு முகம்கழுவும் அழகியலை முழுதாக மறுத்தாலும் அதுவும் தவறு. அகடும் முகடும் மலையும் சரிவும் கல்லும் மண்ணும் இயற்கையடா.. அழகும் அய்வும் ஆதியும் அந்தமும் அதுவும் இதுவும் இயற்கையடா.. மண்ணில் பிறந்தவன் மண்ணோடு போகும் மனிதச் சுழற்சியும் இயற்கையடா ஏரியும் இறங்கியும் எங்கும் உறங்கியும் திரிகிற வாழ்வும் இயற்கையடா. . . பஞ்ச பூதங்கள் பாயொன்று போட படுக்கைலயிலாடும் பாரதமே.. . . நெடுக்குங் குறுக்குமாய் நின்மேலோடும் ஆற்றுரேகைகள் அதுவியற்கை. காற்றும் வந்து கைகள் நீட்டி தேற்றும் தென்றல் அதுவியற்கை சேற்றுக்குள்ளே சிரித்துஆடும் சின்னதவளை அது இயற்கை. சோற்றுக்காக சோறுமறக்கும் சொப்பன உழவன் கனவியற்கை. கம்பன் காட்டிய கழனிவளம் இளங்கோ காட்டும் இந்திரவிழா இலக்கியம் காட்டும் பெருவனப் பெல்லாம் இயற்கை காட்டும் பொதுவனப்பே... சப்தங்கள் பிறந்ததும் சந்தங்கள் பிறந்ததும் இயற்கை அளித்த காட்டினிலே. இத்தகு பெருமை இயற்கை எழிலை

மழலை

படம்
மலையளவு பொருள்சேர்த்து    மனமென்ன காணும் மழலை வானம் மட்டும்தான்   மணமகிழ்வை தூறும். விலையில்லா மதிப்பென்று     பலஉண்டு இங்கே மழலைக்கு ஈடான     மனஇன்பம் எங்கே? கள்ளச் சிரிப்பழகு.     கன்னக் குழியழகு. கண்ணை சிமிட்டியொரு     பார்வை பார்க்கையிலே என்னை இழக்க வைக்கும்     எல்லையிலா பேரழகு.. உள்ளே ஒன்றிருக்க      உரைப்பது வேறில்லை சொல்லில் பிழையானால்      அதுபோல அழகில்லை    எது மழலை என்பதற்கு    என்ன உரை உண்டு - அதில் என்போல தனித்தனியே    எல்லார்க்கும் ஒன்று. கன்னச் சதையழுந்த   சன்னல் கம்பிதேய்த்து கண்காட்டி கைகாட்டி   விடைசொல்லும் வேலையதில், வேலையென்ன?வெட்டியென்ன?   விட்டுவிட்டு ஓடிவந்து விளையாட ஓரெண்ணம்  தோன்றிடுதே - இந்த விந்தைதான் மழலைசக்தி  மரமண்டையே.!! கட்டிக் கரும்பந்த    சுட்டி குழந்தை வந்து கட்டி..அணைக்கையிலே    கல்லன்ன? மலையன்ன? கற்சிலை போல் நின்றிருப்பேன்.. முட்டி முட்டி விளையாடி     முழுவேகம் தீர்த்தாடி மூச்சிரைக்கும் வேலையதில்     மூர்ச்சையாகி நான் வீழ முழுவெற்றி அவன்கையில்..     மூத்தவனாய் என்னைஅவன் கைபிடித்து வழிநடத்த  

வடுக்களின் வரலாறு

#வடுக்களின்_வரலாறு . #கவிதை_வேள்வி ஆனாலும் நானென்ன அப்பாவி வாக்காளன். அதனாலே இப்போது அடங்குகிறேன் இந்த அவலத்தை நினைவூட்ட தொடங்குகிறேன். வலைப்பூ வாசிகளுக்கு வணக்கம். எனக்கு விவரம் தெரிந்த காலம் முதலாய் எந்த ஒரு கொலையோ,கற்பழிப்போ,எதுவோ நடந்தாலும் நம் சமூகம் அதை வெறும் அப்போதைய டீக்கடை பெஞ்சு தீனியாகத்தான் பார்கிறது. இன்னும்சொல்வதானால் நான் கேட்ட ஆகப்பெரிய அரசியல் தந்திரங்களும், தீர்வுகளும், நுணுக்கங்களும் நம் கிராமப்புரங்களின் டீக்கடை பெஞ்சுகளுக்கு தீர்மனங்கள்தான். இங்கே இப்போது பிரச்சனை தீர்வுகள் கிடைப்பதை பற்றி அல்ல. பெரும்பாலான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் முன் அது மறக்கடிக்கபப்டுவது தான். என் மனம் இதை வேறு தளத்தில் நின்று பார்க்கிறது. இங்கே காலச்சுழற்சியின் கட்டுக்குள் அகப்பட்டு கவனமிழக்கும் மக்களுக்கு கண்களின் முன் நின்று நினைவூட்ட ஒன்று தேவை.. இனி அதுப் என் கவிதைகளாக இருக்கும்.