இடுகைகள்

ஜூலை, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கேடி மனம் ( #நேரம் தவறாமை )

நேரம் தவறாமை பெயரிலேயே ஆமை இருக்கிறதே.பிறகெப்படி வேகம் எதிர்பார்ப்பது.முதலில் பெயர் மாற்ற வேண்டும். நேரம் தவறா முயல் என்று.பொதுவாக குறித்த இடத்திற்கு குறித்த நேரத்திற்கு வரும் மனிதர்களை பாராட்ட வேண்டியதில்லை.அதுதான் இயல்பாக இருக்க வேண்டிய பண்பு..ஆனால் இப்போதெல்லாம் பாராட்டும் போதே இவர் குறித்த நேரத்திற்கு வரும் பழக்கம் கொண்டவர் என்றும் கூட சேர்த்து பாரட்டுவதை நேரடியாகவே காண முடிகிறது.. சரி..எப்போது இந்த பழக்கம் தொடங்கியது...ஒரு ஆய்வு செய்து பார்ப்போமா ? . என் எண்ணம் என்ன என்று சொல்லுகிறேன்.எழுத்து வழியாக ஏதோ சொல்ல வேண்டும் என்பதைற்காக இல்லாமல் எல்லோற்கும் எளிமையாக புரியும்வண்ணம் அமைய வேண்டும் என்பதால் இப்படி செல்கிறேன்.ஒருவேளை உங்களுக்கு ஒத்து வந்தால் ஏற்றுகொள்ளுங்கள் அன்றேல் நேரம் தவறா முயலாக உங்கள் அடுத்த வேலையை செய்ய கிளம்பி விடுங்கள்...சரி சிந்திக்க தொடங்கலாமா....உலக மக்கள் எல்லோரும் சரியான நேரத்தில் அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்க. அப்போது ஒரு விழாவிற்கு பெரிய மனிதர் ஒருவரை அழைத்திருந்திருப்பார்கள் எதோ உண்மையான காரணம் ஒன்று இருக்க,அவர் தாமதமாக வந்திருப

வானமே எல்லை

பெரம்பூர் கவியரங்கம்... இலக்கியவானம் அமைப்பு நடத்திய கவியரங்கத்தில் இடம்பெற்ற நம் கவிதை.. தலைப்பு..வானமே எல்லை ஓங்குயர் புகழ்ப்படைத்த தமிழேடுத்து நல்ல பாங்குடை கவிசொல்ல இங்குவந்தேன். எல்லையிலா ஏறுபுகழ் தமிழே உன் சொல்வாங்கி வானமே எல்லையென்று கவிபாட எனைவாழ்த் தடி எல்லை ஒன்று இல்லை என்று     ஏதும் இங்கே இல்லை.. பூமியிலே மாந்தர்செய்யும்      புதுமுயற்சிக் கெல்லாம் பூதலத்தோர் கண்ணில்படும்       வானமொன்றே எல்லை.. கடைக்கோ டியிலே கடலும் வானும்    இணைவது போலே தெரிகிறது எட்டிப் பிடித்து தொட்டிட போனால்.    இன்னும் இன்னும் நீள்கிறது.. வானம்ஒன்று இல்லை இருந்    தாலும் இங்கே இல்லை இல்லாததை எல்லையாக்கி     வெற்றி தேடி ஓடு -நீ வானளாவு புகழ்பெறுவாய்      வாழ்த்திடும் இந் நாடு..           என்றும் அன்புடன           உங்கள் பாம்பன் மு பிரசாந்த்

சொந்தமாய் ஒரு சொர்க்கம்

படம்
சொந்தமாய் ஒரு சொர்க்கம் தமிழ் வணக்கம்: அந்தரத்தின் அந்தரமே சுந்தரத் தேன்தமிழே வந்தெனக்கு நற்றமிழை தந்திடடி நாவினிலே ... தமிழே !!!! வினைசெய்த பயனால் இங்கு                        பிறந்திருக்கிறேன் இணையில்லா உனைத் தாயாய்                        அடைந்திருக்கிறேன் துணைசெய்து உனைஉயர்த்த                        துணிந்திருக்கிறேன் -இந்த துர்பிறப்பு அதற்குத்தானே                        பிறந்திருக்கிறேன் .. சுகமென்ற ஆனந்தம்    சொர்க்கத்தில் உள்ளதென்றால் அகமகிழும் ஆனந்தம்    அது என்ன வீணா?? தக தக வென கதிர்கொதித்து      புவிவெப்பம் பொங்கும்போதும் குளுகுளுவென வாழும்நிலை      சொந்த சொர்க்கமே.. தனிவீடு தானின்றி   தார்ச்சாலை வீடாக தன்குடும்பத் தோடுவாழும்    புன்மனது வறியவனின் அரைவயிற்று அருங்குடும்பம்   குறைவயிற்று கூழ்குடித்து கொஞ்சம் சிரிப்பதுவும்    சொந்த சொர்க்கமே சல்லிக்கட்டு வேண்டி அன்று     சுள்ளிக்கட்டின் வலிமைபோல துள்ளிக் கட்டி கூடி உண்மை     சொல்லிக்காட்டி வென்ற பொது சொந்தமான சுவர்க்கம் ஒன்று    வந்த இன்பம் வந்ததே ...     போராட்ட பெண்களுக்கு க

கவிதாஞ்சலி (கவிக்கோ)

படம்
மறைந்த ஐயா கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுக்காக கவிதை சிறகுகள் அமைப்பு நடத்திய கவிதாஞ்சலி கவிதை... மதம் கடந்து மனித பண்புகளோடு மல்லாந்த முகத்தோடு அனைவரையும் எதிர்கொள்ளும் பண்பாளர்.சிறந்த இலக்கிய வாதி ..ஆகச்சிறந்த கவிஞர்,பேச்சாளர்,எழுத்தாளர்,சிந்தனையாளர்,.. மொத்தத்தில் தமிழக இலக்கிய உலகில் முத்திரை பதித்து இருக்கக்கூடிய இலக்கிய ஆளுமை...என்போன்ற ரசிகர்களுக்கும் சரி, நல்ல ரசிகர்களுக்கும் சரி, இவர் படைப்புகள் தீனி போட்டு திருப்திப்படுத்தும் என்பதில் ஐயமில்லை ....      #  கவிதாஞ்சலி  பால்வீதி பார்க்க சென்ற      படைப்பாளி ஒருவருக்கு, கடவுளை காணச்சென்ற-என்        கவிதை கடவுளுக்கு  காதலாகி கசிந்துருகி       கண்ணீர் மல்க கவிதாஞ்சலி  தவிக்கும் மனதுக்கு     தாய்தமிழல் மருந்திட்டு  செவிக்கோர் விருந்தாக     தீந்தமிழை தந்தளிக்கும்   புவிக்கோர் நாயகன் என்      கவிக்கோவின்  காலடியில்  கண்ணீரை சேர்த்தவாறு      காலம் கடத்த நான்  கற்றுக்கொண்   டிருக்கிறேன்  சொல்லும் சொல்லில்   வெல்லும் சொல்லை  சொல்லிச் சொல்லி    வெல்லும் கலையால்  துள்ளும் மனத

மது செய்யும் மாயம்

படம்
  தமிழ்நாடு திருவள்ளுவர் காலை இலக்கிய மன்றம் நடத்திய கவியரங்கில் இடபெற்ற மது   செய்யும் மாயம் என்ற தலைப்பிலான கவிதை ..                   மது செய்யும் மாயம் தமிழ் வணக்கம் : தமிழே ..!! நீ இல்லாமல் எப்படி நான்                  தனித்திருப்பேன் நீ இல்லாது போனால் நான்                   தவித்திருப்பேன் தேடியெனும் உனைக்கற்று                   களித்திருப்பேன் - அந்த தேவாமிர் தம்போலே                   இனித்திருப்பேன் ... உச்சப்புகழ்   பெற்றுலகம்         மெச்சத்தகு அருந்தமிழே - நான் கச்சத்தீவு அருகிருந்து         கன்னித்தமிழ் பருகி - மேலோர் கற்பனையில் கசிந்து வந்த        மிச்சத் தமிழ் பருகி மீட்டுகிறேன் கவியொன்று        கேட்டிடுவீர் செவிகொண்டு . மது செய்யும் மாயம் : மாதை தொடும்போது       மனதிலோர் மாயம் . வாதை வரும்போது      உடலிலா மாயம் போதை புகும்போது       என்னென்ன மாயம் உன்னாலே பலருக்கும்       மனதளவில்   காயம் இது மது செய்யும் மாயம் . மதியிழந்து