இடுகைகள்

அக்டோபர், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சாவு

.......கெட்ட  சாவு ..... விழுந்த  இடத்தில்     எழுந்து பார்த்தேன். சரிந்து கிடந்த தென் சரீரம். சாவது எவர்க்கும்   ஆவது உறுதி -அதை  அறியாதிருந்த தென் அறிவீனம். உடலின் பலம் மேல்  உள்ள நம் பிக்கையால்  உதறித் தள்ளினேன் உறவுகளை  இன்று ஊரே நிற்கிறது ஒருவரும் அழவில்லை உற்சாகம் தெரிகிறது-என்  உயிர் போன தாலோ ?  ஊரும் இல்லை உறவும் இல்லை  உனக்காக வருந்த ஒருவரும் இல்லை  வாழும் வரையில் அதிகாரம்  செய்தது எல்லாம் வீணாகும். உன்னை எண்ணி ஒருவன் வருந்த  உலகில் உன் சாவு உயர்ந்த தாகும். அன்றேல்  நுந்தம் பிறப்பென்பதே  நுங்கின் இடைப்பட்ட கசடாகும். நல்ல வாழ்க்கை வாழ எண்ணி  நாளும் எங்கும் மனிதனே  நல்ல சாவு கிடைக்க கொஞ்சம்  நல்ல உள்ளம் கொள்ளுவோம்    என்றும் அன்புடன் \       உங்கள்  முகவை மு பிரசாந்த் 

சொல்லாத காதல்

 ...சொல்லாத காதல் ... சொல்லாத காதல் இல்லாம போச்சு     துள்ளாத மனமிப்போ தூள் தூளா ஆச்சு - நீ       இல்லாத வாழ்க்கை இனிவேணா எனக்கு       இத்தோட முடிஞ்சது-நம்ம ரெண்டு பேரு கணக்கு இல்லாம இல்ல உன்மேல்        எல்லையில் லாத அன்பு -நா சொல்லாம போனதுதான்         செஞ்சு வெச்ச ஒரே தப்பு   கண்மூடித் தனமா காதலிச்சேன்-உன்         கல்யாண சேத்தி கேட்டு பேதலிச்சேன் கரையில மீனாக தத்தளிச்சேன்-மனம்         கண்ணாடி போல் நொறுங்க நா தவிச்சேன் வாழ்ந்தா தான் காதலுன்னு     வழக்கேதும் இல்லையடி-நா வாய்திறக்காத குற்றத்துக்கு -இது     வாழ்நாள் தண்டனை டி ... ஆனது ஆகட்டும்     போனது போகட்டும்    நல்ல வாழ்க்கை ஒன்றாக       நடப்பதெல்லாம் நன்றாக உனக்கொரு வாழ்க்கை உண்டாக       நானுன்டென்றும் உனக்காக.......           என்றும் அன்புடன்                    உங்கள்         முகவை.மு.பிரசாந்த்