இடுகைகள்

பிப்ரவரி, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதலியின் வேதனை - கவிஞர் பெனடிக்ட்

படம்
kavignar Benadict Poems Watch the Video                                                        காதலியின் வேதனை

வையத் தலைமை கொள்

என்னதான் நினைத்தான் எட்டய புரத்தான்.#௦௩ (#03) மீண்டும் அனைவருக்கும் வணக்கம்.                    எதிர்பாராத அளவிற்கு ஆதரவு நல்கும் உங்கள் அனைவருக்கும் கடமைப்பட்டவனாக இருக்கிறேன்.அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். என்னதான்  நினைத்தான் எட்டய    புரத்தான் தொடரில் 3வது கட்டுரையாக வையத் தலைமை கொள் என்கிற வீரியமிக்க சொல்லில்  பாரதி விதைக்க நினைத்தது குறித்து.      யாரைத் தலைவனாக்க      யாருக்கும்  தெரியாது தலைவரென்றால்   யாரென்று      தலைவருக்கும்  தெரியாது எப்படியும்  இயக்கமுண்டு      எப்படியோ  தெரியாது இருந்தாலும்  வாழ்கின்றோம்       ஏனென்று  தெரிyathu                                                                            -நெய்தலான்   புதுக்கவிஞர்  நெ ய் தலானின்  வரிகள் பாரதியின் அதே உள்ளக்  குமுறலை அள்ளித் தெளிக்கிறன. நெஞ்சு  பொறுக்குதில்லையே -இந்த நிலைகெட்ட  மாந்தரை நினைத்து விட்டால்   . நினைத்தால்  நெஞ்சு  கொதிக்கிற வரிகள்.        எவனுக்கோதானே பிரச்சினை  என் மயிர்முதல் உயிர்வரை பத்திரமாய்த்தான் இருக்கிறது என்பதை உறுதி செய்து

புதியன விரும்பு

படம்
                        புதியன  விரும்பு           “பழையன  கழிதலும் புதியன புகுதலும் ”  என்பது நன்னூல் விதி  . இந்த  விதியின் பொருளாக  அனைவரும் எண்ணுவது பழையவைகள் அழிக்கப்பட்டு  புதியவைகள்  வரவேண்டும் என் பதா ம். ஆதிகாலந் தொட்டே தமிழர் மரபு என்தாவ்ன்றையும் அழித்து புதுமை படைக்க சொன்னதே கிடையாது..  என்னடா   இது ?  ஏதோ   பழைய  புராணம் பாடத் தொட ங் குகி றானே  என்று என்ன வேண்டாம். உண்மையில்  பழமையும்  புராணமும் அவ்வளவு சலிப்பு தருபவை  ஒன்றும் அல்ல.         வெகு நாட்களாகவே எனக்கு பாரதியின் ஆத்திசூடி வரிகளை தலைப்பாக்கி கட்டுரை எழுத வேண்டும் என்கிற  ஆசையொன்று உள்நெஞ்சை அரித்துக்கொண்டே இருந்தது. அந்த  வகையில்  ரௌத்திரம் பழகு என்ற தலைப்பில் வெளியிட்ட கட்டுரைக்கு நீங்கள் தந்த ஆதரவை எண்ணி பாரதிக்கு நன்றிகளை காணிக்கையாக்கி கொள்கிறேன்.  தொடர்ந்து இதேபோல்  உங்கள் பேராதரவையும் மேலான கருத்துகளையும் அளிக்க வேண்டுகிறேன்.       இன்றைய நம் தலைப்பு புதியன விரும்பு என்கிற பாரதியின் மற்றுமொரு ஆத்திசூடி வரி.  உண்மையில் இது எனக்கு நெருக்கமான மற்றும் எல்லாவற்றுக்கும் மேலான வரி..ஏன் இதை இப்படி ச

வாழத்தான் வாழ்க்கை #1

படம்
வணக்கம். பிறப்பது எதற்கு ? இறப்பதற்கு. எனில் இறப்பது எதற்கு ??.....         எங்கள் பக்கத்து வீட்டு தாத்தாவிடம் கிண்டலாய் கேட்டுவிட்டு விளையாட ஓடிபோய்விட்ட ஒரு குழந்தையின் கேள்வி இது.  அதுவரையில் தாத்தா முகத்தில் இருந்த அனுபவ கம்பீரம் அப்போது காணாமல் போயிருந்தது.         அடுத்தவீட்டு சங்கதியை ஓட்டுக்கேட்டு அது குறித்து சிந்திப்பதும் கூட அலாதியான சுகம்தான். ..சரி... இந்த கேள்வி... என்னதான் இது. எதற்கு இறக்க வேண்டும். உடல் ஒத்துவராத நிலை எய்தி உயிர் பிரிந்தபோது இறப்பு நேர்கிறது என்கிறோம். அப்படியென்றால் உடல் நன்றாக இருக்கும்போதே இறந்துவிட்டால் இந்த சங்கடம் இல்லைதானே?. ஆனால் அது வாழவேண்டிய வயது என்கிறோம். எனில் வாழ வேண்டிய காலம் என்றுஒன்று இருக்கிறது என்றால் அந்த நாட்களில் என்ன செய்ய வேண்டும்.  செய்வது இது என பட்டியலிட முடியுமா?. முடியுமென்றால்,  இதை செய்து கொண்டே இருப்பதுதான் உலகமா?. இதுதான் உண்மையா? இல்லை உண்மையாகவே வாழ்க்கை என்பது வேறா?. என சிக்கலுக்குள் சிக்கல் வந்து  சிக்கி கொள்கிறது.  அதாவது இட்டிலி  வாங்கின இடத்தில் இடியாப்ப சிக்கல் போல.    கொஞ்சம் குழப்பமாகத்தான் இர

எங்கடா காதல்

காதலென்ன கண்ணாமூச்சி ஆட்டமா? காதல் காதல் காதல் காதல் காதல் இனித்திடும் நரகமா.. ஆஆஆ.. காதலுக்கு பள்ளிக்கூடம் கட்ட போறேன் நானடி காதலிக்க பெண்ணொருத்தி பார்த்து விட்டேனே காதல் தந்த வலிதீரும் காதலினாலே காதல் சொல்வது உதடுகள் அல்ல கண்கள் தான் தலைவாஆஆஆ.. இந்த பாடல்களெல்லாம் உங்களுக்கு தெரியாமல் இல்லை.ஆனால் இந்த நேரத்தில் உங்களுக்கு இதை நினைவூட்ட வேண்டியது கடமைஆகிறது.ஊடகத்துறையின் உச்சவேக போராளி, எதையும் மக்களிடத்தே எளிதில் கொண்டுசேர்க்கும் வல்லமை படைத்த சினிமா. சில நல்ல கதாநாயகர்களை திரையில் காணும்போது இதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்று மனம் ஒரு சமாதானம் சொல்லிக்கொள்வதை போல இப்போது காதலும் ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. அதாவது உண்மையான காதலெல்லாம் சினிமாவில் தான். நிஜத்தில் வாய்ப்பே இல்லை என்கிற மனநிலைக்கு நம் சமூகம் வந்துவிட்டது. எங்கோ தலைதூக்கும் நல்லவர்களை போல, ஆங்காங்கே தலைதூக்கும் உண்மையான காதல்  செத்துப்போகிறது இந்த சமுதாயம் போடுகிற அவசர கால கூச்சலில் சத்தமில்லாமல் செத்துப்போகிறது.இதுதான் காதலோ என்பதை இனிவரும் தலைமுறை யாரைப்பார்த்தும் கற்றுக்கொள்ள முடியாது.ஒருவேளை கற்

லவ் பண்றது தப்பா??

லவ் பண்றது தப்பா..   எல்லாரும் கேட்ட கேள்விதான். ஆனா பதில் மட்டும் வேற வேற.  இடத்தை பொறுத்தும் ஆட்களை பொறுத்தும் பதிலின் தண்மையும் மாறிக்கொண்டே இருக்கும். எனக்கு தெரிந்தவரை இந்த மாதிரியான சிறப்பு வேறெந்தஒரு கேள்விக்கும் வாய்த்ததில்லை.   கேள்வி ஒண்ணுதான். ஆனால் கேட்பது நம்ம வீட்டு புள்ளையாஇருந்தா ஒரு பதில். பக்கத்துவீட்டுபுள்ளையா இருந்தா ஒரு பதில். எவ்ளோ செல்பிஷ் இல்ல நாம. ஆனாலுங்கூட நம் மேல் ஒன்றும் இதில் தவறில்லை. கடந்து வந்த கால மாற்றத்தில் எல்லாவற்றையும் டேக் இட் ஈஸி என்று சொல்ல முடிந்த நம்மால் நம் வீட்டுக்குள் வரமுயற்சிக்கும் காதலை மட்டும் அப்படி ஒத்துக்கொள்ளமுடிவதில்லை. காரணம் எவராலும் தகர்க்க முடியாத தமிழகத்தின் சாதிமுறை சமுதாயம்.             என்னடா இது ஜாலியா ஆரம்பிச்சு சாதிய கொண்டு வந்து கோர்க்குற னு கேக்குறீங்களா. ஆரம்பத்திலே எனக்கும் அப்படித்தான் இருந்தது.காதலிப்பது தவறா? என்கிற அப்பாவிகளின் கேள்விக்கு அப்பாக்களின் பதில்  என்ன என்று அறிய முற்பட்டு ஒரு குட்டி  களஆய்வை மேற்கொண்டது எங்கள் குழு. விளைவு.... பெரும்பாலான பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை தவிர மற்ற பிள்ளைகளின் காதலுக