இடுகைகள்

ஜனவரி, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேசம்மா என்னும் திணைநிலத்தேவை

படம்
தேசம்மா ( சிறுகதைகள் )... வெளியீடு - காலச்சுவடு என்ன சொல்லித் தொடங்குவது உங்களோடு..? க.அரவிந்த்குமார் என்று ஒருவர். ஒரு சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டிருக்கிறார். எழுத்தாளர்கள் ஜோ டிக்ரூஸ், என்.ஸ்ரீராம், இரா.முருகவேள், ஷாஜி, நக்கீரன் கோபால் மற்றும் திட்டமிட்டபடி திடீரென்று திருமாவளவன் என அனைவரும் சிறப்பு விருந்தினர்களாக வந்து நேற்று (04.01.2020) அந்த நூலை வெளியிட்டனர். கூடவே அவருக்கு முக்கியமானவர்களும், அவரை முக்கியமானவராகக் கருதுபவர்களும் வந்திருந்தார்கள். இவ்வளவுதான் செய்தி... என் அன்புள்ள அண்ணன் என்பதற்காகவும், அவரது ஆழஅகன்ற வாசிப்பைப் பலமுறை ஆச்சரியத்தோடு பார்த்தவன் என்ற முறையிலும் நானும் விழாவுக்குச் சென்று வந்தேன். அது அவருக்காக. ஆனால்...இந்தப் பதிவு இந்தப் பதிவு முற்றிலுமாக அவர் நீங்கலானது. அவருக்கும் தேசம்மாவுக்கும் இருக்கும் தொடர்பு இந்தப் பதிவில் ஆட்டத்துக்கு இல்லை. இன்னும் தெளிவாகச் சொல்வதானால், இந்தப் பதிவு தேசம்மாவுக்கும், எனக்கும், உங்களுக்கும் மட்டுமானது. மொத்தத்தில், இது தேசம்மாவைச் சொல்லும் பதிவு கிடையாது. தேசம்மா உணர்த்தும் தேவையைச் சொல்லும்