இடுகைகள்

மார்ச், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பட்டாசுப் பிஞ்சு (Pattaasu pinju )

படம்
அன்னப் பருக்கைஅள்ளி உண்ணத் தொடங்குகையில் எண்ணத்தில் வந்த தந்தச் சிவகாசி சிறுவர் நிலை      கொள்ளிக் கொலைமருந்தை      அள்ளிக் கையாண்டு பள்ளிப் படிப்புவிட்டு தள்ளி நின்று வாழுகிற சுட்டிக் குழந்தைகளை கட்டிக் காப்பாற்ற – எவரோடும் முட்டிப் பயனில்லை எட்டி நோக்கினால்.....      வட்டிக் கடன் போட்ட குட்டியின் குட்டிகளை தட்டிக் கரைக்க எண்ணி கட்டித் தங்கங்களை சட்டிக் குதிரையாக்கிச் சாக்கடையில் தள்ளினரோ?? பள்ளித் தளமனைத்தும் கோயில் செய்யச் சொன்னதனை பகுத்தாய்ந்து பாராமல் பாரெங்கும் பணம் கொட்டி கோடானு கோடிகளாய் கோயில் செய்தது போதாதா? -இனி கோயிற் தளமனைத்தும் பள்ளி செய்வோம் – சிவகாசிப் பட்டாசுஆலைக்குள்ளும் துள்ளிச் செல்வோம் வாரீரோ ?? என்றும் அன்புடன் உங்கள்  முகவை மு பிரசாந்த்... இராமேஸ்வரம்

ரௌத்திரம் பழகு

படம்
  உணர்சிகள் அற்றுப்போன        உடம்பதுவே பிணமப்படி அல்லாத மற்றதெல்லாம்         பொல்லாத உயிர்விலங்காம்                                 - நெய்தலான்                 உணர்சிகள் அற்ற உடல் பிணமென்றும் , அவ்வாறல்லாத அனைத்தும் உயிருள்ள விலங்கு என்றும் சொல்கிற இந்த கவிஞரின் வரிகளுக்கு பின் பாரதியின் சாயlல்  காண முடிகிறது...உணர்ச்சிகளில் உயர் உணர்ச்சி எது என்றால் கோபம் என்கின்றனர் பெரியோர். ஆம்.. உண்மைதான். மனதில் சேர்ந்த அடித்துணை அழுக்கையும் ஒரே முறையில் வெளிக்கொணர்ந்து மனதை சுத்தப் படுத்திவிடுகிற ஒரு மகத்தான மனித மாண்பு. கோபப்பட்டு தீர்ந்த பின் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டு தெய்வ நிலை அட்பாயவும் ஒருவனை தயார் படுத்தி விடுகிற கோபமே சிறந்தது என்பது ஏற்கத் தக்கதே.      அனால் இந்த கோபம் என்கிற உணர்வை பாரதி வேறு விதமாக அணுகுகிறான்.கோபம்,ஆத்திரம்,சினம் என பற்பல வார்த்தைகள் இருக்கும்போது புதிதாக ரௌத்திரம் என்கிற  வார்த்தை ஒன்றை பயன்படுத்துகிறான். ஆக என் புதிதாக சொல் தேடுகிறான் என்றும் சிந்திக்க வேண்டியுள்ளது. “சினம் எனும் சேர்ந்தாரை கொல்லி” “கோபத்தோடு எழுபவன் இழப்போடு அமர்கிறான்

நண்பா உனக்காக

படம்
அன்று கடலில் சிங்களப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட நண்பன் ப்ரிட்சோ வின் மறைவுக்காக.... இத்துப்போன பழங்கதையால் செத்துப்போன நண்பனை எண்ணி கத்திக்  கத்தி தொண்டத் தண்ணி வத்திப்போச்சு பாத்தீரா ? கண்டத்தில் பாஞ்ச குண்டு தொண்டைக்குழி துளைக்கையிலே துள்ளத் துடிக்க அவன் துடிச்ச  துடி புரியலையா ?? அரக்கன் மனங் கூட அரைநொடியாவது யோசிக்குமே அந்த நொடி சுடும்போது அறிவுகெட்ட உன் மூள எந்த ஒன்னுஞ் சொல்லலியா?- நீ மனுஷன் என்பது நினைவில்லயா? Pritjo- who died (07.03.2017) yesterday .. Who was killed By srilankan navy பாவிகள் தம் படைமடம் காட்ட பாலகன் இவன கொன்னீரோ ? சதியோ ? விதியோ ? யார்செய்த பிழையோ? மிச்சம்  மீனவன் கண்ணீரோ? பட்டதும்  போதும் கெட்டதும்  போதும்.... பார்த்துச் சகித்து  விட்டதும்  போதும்.. சில்லறைப் புத்திச் சிங்கள அரசே சின்னஞ் சிறுவரை சுட்டதும்  போதும் . சோறு போடும் சாமி என்று        கடலை  நினைக்கிறான் - சென்றால் மாறி மாறி பூச்சி போல        செத்து வீழ்கிறான் - பின்பு யாரு போடும் திட்டமென்று        அறிய பார்க்கிறான்-அவன் அறியாமல் கடைசியிலே         மாண்டு