கூடிய விரைவில் சாகப் போகிறேன்

கூடிய விரைவில் சாகப்போகிறேன்
  தேதியும் முடிவில்லை -நான்
பாடிய கவிகள் எதுவும் எனக்கு
  திருப்தியும் தரவில்லை
ஆடிய ஆட்டம் அடங்கிடும்வேளை
   அரங்கம் திறக்கிறது - அங்கே
தேடிய பொருளால் கூடிய உறவெனை
    சுற்றிக் கிடக்கிறது.

ஓடிய வேளை உடனிருந்த என்
    நண்பன் ஒருபுரத்தில்
வாடிய வேளை வருத்தம் துடைத்த
    அன்பன் ஒருபுரத்தில்
நாடிய நாயகி நாட்டுக்கழுகிற
    நீலிக் கண்ணீர் ஒருபுரத்தில் - என்
நீடிய கனவின் நீண்ட பயணத்தில்
    நேரம் கழித்தவர் மறுபுறத்தில்.

சொல்லிச் சொல்லி அழுதிடுவார்க்கு
    சோகம் அடைக்கிறதாம்.
முதல்நாள் விழுந்த பூவை பார்த்து
    மொட்டுகள் அழுகிறதாம்..
எவரும் ஒருநாள் போவார் அதனை
    உலகம் உணரட்டும் - உன்
தவறும் சரியும் சாவோடு முடிவதை
     மனமும் உணரட்டும்..

   
   
   

   
   

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வையத் தலைமை கொள்

புதியன விரும்பு

என்னை கவர்ந்த குறள்