கூடிய விரைவில் சாகப் போகிறேன்
கூடிய விரைவில் சாகப்போகிறேன்
தேதியும் முடிவில்லை -நான்
பாடிய கவிகள் எதுவும் எனக்கு
திருப்தியும் தரவில்லை
ஆடிய ஆட்டம் அடங்கிடும்வேளை
அரங்கம் திறக்கிறது - அங்கே
தேடிய பொருளால் கூடிய உறவெனை
சுற்றிக் கிடக்கிறது.
ஓடிய வேளை உடனிருந்த என்
நண்பன் ஒருபுரத்தில்
வாடிய வேளை வருத்தம் துடைத்த
அன்பன் ஒருபுரத்தில்
நாடிய நாயகி நாட்டுக்கழுகிற
நீலிக் கண்ணீர் ஒருபுரத்தில் - என்
நீடிய கனவின் நீண்ட பயணத்தில்
நேரம் கழித்தவர் மறுபுறத்தில்.
சொல்லிச் சொல்லி அழுதிடுவார்க்கு
சோகம் அடைக்கிறதாம்.
முதல்நாள் விழுந்த பூவை பார்த்து
மொட்டுகள் அழுகிறதாம்..
எவரும் ஒருநாள் போவார் அதனை
உலகம் உணரட்டும் - உன்
தவறும் சரியும் சாவோடு முடிவதை
மனமும் உணரட்டும்..
கருத்துகள்
கருத்துரையிடுக