சொல்லாத காதல்


 ...சொல்லாத காதல் ...

சொல்லாத காதல் இல்லாம போச்சு
    துள்ளாத மனமிப்போ
தூள் தூளா ஆச்சு - நீ
      இல்லாத வாழ்க்கை
இனிவேணா எனக்கு
      இத்தோட முடிஞ்சது-நம்ம
ரெண்டு பேரு கணக்கு

இல்லாம இல்ல உன்மேல்
       எல்லையில் லாத அன்பு -நா
சொல்லாம போனதுதான்
        செஞ்சு வெச்ச ஒரே தப்பு  

கண்மூடித் தனமா காதலிச்சேன்-உன்
        கல்யாண சேத்தி கேட்டு பேதலிச்சேன்
கரையில மீனாக தத்தளிச்சேன்-மனம்
        கண்ணாடி போல் நொறுங்க நா தவிச்சேன்

வாழ்ந்தா தான் காதலுன்னு
    வழக்கேதும் இல்லையடி-நா
வாய்திறக்காத குற்றத்துக்கு -இது
    வாழ்நாள் தண்டனை டி ...

ஆனது ஆகட்டும்
    போனது போகட்டும்  
 நல்ல வாழ்க்கை ஒன்றாக
      நடப்பதெல்லாம் நன்றாக
உனக்கொரு வாழ்க்கை உண்டாக
      நானுன்டென்றும் உனக்காக.......

          என்றும் அன்புடன்
                   உங்கள்
        முகவை.மு.பிரசாந்த்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வையத் தலைமை கொள்

புதியன விரும்பு

என்னை கவர்ந்த குறள்