I லவ் songs. பட் நாட் நவ் ( ஐ love சாங்ஸ்.but not now)

அந்தியில வானம்.
சுந்தரரே வாரும்
சதிராட்டம் சிந்து படிக்கும்....

மாலை நேர காத்து வந்து வீச
மச்சான் மேல ஆசை கொண்டு பேச....

எருக்கஞ்செடி யோரம் ......

தூதுவளை இலை அரைச்சு..டொய்ங்..
தொண்டயில தான் நனைச்சு.. டொய்ங்.

இன்னும் பல  இன்னும் பல இத்யாதி இத்யாதிகள் எல்லாம் .......

அடக் கடவுளே....

இந்த பஸ் ஒனர்களுக்கும் டிரைவர் கண்டக்க்றர்களுக்கும் வேற பாட்டுகளே கிடைக்காதா ?

இல்ல. மத்த புது சினிமா பாட்டெல்லாம் போட்டா சாமிகுத்தமா ?

அதெப்படி எல்லாரும் ஒரே மாதிரி டெம்ப்ளேட் வெச்சு பாட்டு போடுறாங்க..sobba.. அ.அ.அ. முடியல...

இல்லப்பா அதெல்லாம் அவன் அவன் இஷ்டம்.அவன் அவனுக்கு புடிச்சத அவன் கேக்குறான் னு சொல்றீங்களா..

அப்போ நான் கேக்குறேன்... அவனுக்கு விருப்பமான பாட்ட கேக்குறதா இருந்தா அவன் வீட்ல போட்டுல்ல கேக்கணும்.எல்லாரும் இருக்குறப்ப கேட்டு எங்களையும் வெறுப்பேத்தி வெங்காயம் உரிக்கிறதா?..

Sorry ங்க. நா headset கொண்டு வர மறந்துட்டேன். அதான் இவ்ளோ புலம்பல்.ஆக உங்களுக்கெல்லாம் ஒரு சின்ன அனுபவ பாடம். ஊருக்கு போறப்ப headset மறக்காம எடுத்துட்டு போங்க..

சரி சரி பை. அடுத்த பாட்டு போட்டுட்டான்..

தில் தில் தில் தில். மனதில்
ஒரு
தல் தல் தல் தல் காதல்........

ஆகாஆஆஆஆஆ....

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வையத் தலைமை கொள்

புதியன விரும்பு

என்னை கவர்ந்த குறள்