என்னை அறிந்தால்
என்னை அறிந்தால்
ஒரு தடையும்
வழியில் இல்லை-இலக்காக
விண்ணை அறிந்தால்
காதல்முறிவு
காணாமல்போகும்-சரியாக
பெண்ணை அறிந்தால்
ஓடி ஓடி ஊர்முழுக்க
சொத்து பத்து சேர்க்கமாட்டான்
கடைசியான 6 அடி
மண்ணை அறிந்தால்
அறிதோறும் அறியாமை
அறிந்தவர் யாரோ
அறிவாளி அவரென்று
அகிலம் சொல்லும்-இதை
அறியாதார் மடையரென்றும்
அதுவே சொல்லும்.
ஆடும் வரை ஆடிவிட்டு
காடு தேடி ஓடும்
கூடு என்ற உண்மை மட்டும்
உணர்ந்திருந்தால் போதும்.
என்றும் அன்புடன்
உங்கள்
பாம்பன் மு பிரசாந்த்
கருத்துகள்
கருத்துரையிடுக