என்னை அறிந்தால்

என்னை அறிந்தால்


ஒரு தடையும் 
வழியில் இல்லை-இலக்காக
விண்ணை அறிந்தால்
காதல்முறிவு 
காணாமல்போகும்-சரியாக
பெண்ணை அறிந்தால்
ஓடி ஓடி ஊர்முழுக்க
சொத்து பத்து சேர்க்கமாட்டான்
கடைசியான 6 அடி
மண்ணை அறிந்தால்



அறிதோறும் அறியாமை
அறிந்தவர் யாரோ
அறிவாளி அவரென்று
அகிலம் சொல்லும்-இதை
அறியாதார் மடையரென்றும்
அதுவே சொல்லும்.

ஆடும் வரை ஆடிவிட்டு
காடு தேடி ஓடும்
கூடு என்ற உண்மை மட்டும்
உணர்ந்திருந்தால் போதும்.

என்றும் அன்புடன்
உங்கள்
பாம்பன் மு பிரசாந்த் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வையத் தலைமை கொள்

புதியன விரும்பு

என்னை கவர்ந்த குறள்