ஆணா ?பெண்ணா ?

கட்டிலிலே ஆடவன்தான் ஆதிக்கமா?-இந்த
ஆதிக்கத்தால் சமஉரிமை பாதிக்குமா?
இயற்கை நம்மை இப்படியும் சோதிக்குமா?-இதை
பின்தொடர்ந்தால் இந்த உலகம் சாதிக்குமா?


சரிபாதி பெண்ணென்ற 
       நிலை வேண்டுமே-அதை
சரித்துப் பேசிடாத 
       தலை வேண்டுமே
சரிபாதி தரமறுத்து 
      சண்டையிடும் மனிதா? அவள்
சரிபாதி இல்லையெனில் 
     உயிர்வாழ்வது எளிதா?


உறுப்பில் பிரிவினையா? 
     உணர்வில் பிரிவினையா?
அடுப்பென்ன விறகென்ன 
     இணைந்தால்தான் வாழ்வு
அதுகூட புரியாவிடில் ....... இப்படியே சாவு....

 -பாம்பன்.மு.பிரசாந்த்

அழியாத எண்ணங்களால் மனதில் நிலையாக வாழுகின்ற கண்ணதாசனின் எண்ணங்கள் ஆயிரம்  மிகக்குறைந்த விலையில்  35 ரூபாய் மட்டுமே...

                                                       

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வையத் தலைமை கொள்

புதியன விரும்பு

என்னை கவர்ந்த குறள்