என்னதான் நினைத்தான் எட்டய புரத்தான்.#௦௩ (#03) மீண்டும் அனைவருக்கும் வணக்கம். எதிர்பாராத அளவிற்கு ஆதரவு நல்கும் உங்கள் அனைவருக்கும் கடமைப்பட்டவனாக இருக்கிறேன்.அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். என்னதான் நினைத்தான் எட்டய புரத்தான் தொடரில் 3வது கட்டுரையாக வையத் தலைமை கொள் என்கிற வீரியமிக்க சொல்லில் பாரதி விதைக்க நினைத்தது குறித்து. யாரைத் தலைவனாக்க யாருக்கும் தெரியாது தலைவரென்றால் யாரென்று தலைவருக்கும் தெரியாது எப்படியும் இயக்கமுண்டு எப்படியோ தெரியாது இருந்தாலும் வாழ்கின்றோம் ஏனென்று தெரிyathu -நெய்தலான் புதுக்கவிஞர் நெ ய் தலானின் வரிகள் பாரதியின் அதே உள்ளக் குமுறலை அள்ளித் தெளிக்கிறன. நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்து விட்டால் . நினைத்தால் நெஞ்சு கொதிக்கிற வரிகள். எவனுக்கோதானே பிரச்சினை என் மயிர்முதல் உயிர்வரை பத்திரமாய்த்தான் இருக்கிறது என்பதை உறுதி செய்து
புதியன விரும்பு “பழையன கழிதலும் புதியன புகுதலும் ” என்பது நன்னூல் விதி . இந்த விதியின் பொருளாக அனைவரும் எண்ணுவது பழையவைகள் அழிக்கப்பட்டு புதியவைகள் வரவேண்டும் என் பதா ம். ஆதிகாலந் தொட்டே தமிழர் மரபு என்தாவ்ன்றையும் அழித்து புதுமை படைக்க சொன்னதே கிடையாது.. என்னடா இது ? ஏதோ பழைய புராணம் பாடத் தொட ங் குகி றானே என்று என்ன வேண்டாம். உண்மையில் பழமையும் புராணமும் அவ்வளவு சலிப்பு தருபவை ஒன்றும் அல்ல. வெகு நாட்களாகவே எனக்கு பாரதியின் ஆத்திசூடி வரிகளை தலைப்பாக்கி கட்டுரை எழுத வேண்டும் என்கிற ஆசையொன்று உள்நெஞ்சை அரித்துக்கொண்டே இருந்தது. அந்த வகையில் ரௌத்திரம் பழகு என்ற தலைப்பில் வெளியிட்ட கட்டுரைக்கு நீங்கள் தந்த ஆதரவை எண்ணி பாரதிக்கு நன்றிகளை காணிக்கையாக்கி கொள்கிறேன். தொடர்ந்து இதேபோல் உங்கள் பேராதரவையும் மேலான கருத்துகளையும் அளிக்க வேண்டுகிறேன். இன்றைய நம் தலைப்பு புதியன விரும்பு என்கிற பாரதியின் மற்றுமொரு ஆத்திசூடி வரி. உண்மையில் இது எனக்கு நெருக்கமான மற்றும் எல்லாவற்றுக்கும் மேலான வரி..ஏன் இதை இப்படி ச
இலக்கிய வளமை எவ்வளவாயினும், உலகளாவிய வெற்றிபெற அம்மொழி விஞ்ஞான மொழியாயும் இருத்தல் அவசியம். என்னைக் கவர்ந்த திருக்குறள் என்கிறபடிக்கு எனக்கு சட்டென்று நினைவுக்கு வந்த குறள் இதுதான். எல்லோர்க்கும் நல்ல அறிமுகமுள்ள ஓர் நல்ல அறிவுரை. ஆனால் அது அறிவுரை என்கிற கூட்டுக்குள் அடைக்கப்பட்ட ஓர் அறிவியல் கிளி. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது என்றோ மறப்பது நன்று. என்ன இது.. குறளையும் பொருளையும் குளறுபடி செய்கிறாயே என்கிறீர்களா?.கொதிக்க வேண்டாம். உண்மையில் இந்தக் குறள் இப்படி இருந்திருந்தாலும் நாம் போற்றித்தான் இருந்திருப்போம். இன்னும் ஒருபடி மேலேபோய், ஒரு சராசரி மனிதன் எப்படி தனக்கு நடந்த நன்றல்லதான ஒன்றை உடனே மறக்க முடியும்.அந்த உளவியலை நன்குணர்ந்தே வள்ளுவர் என்றோ ஒருநாள் அதை மறந்துவிடுவது நன்று என்றிருக்கிறார் என்று உரைகளும் வேறு சொல்லியிருப்போம். ஆனால்..... அன்றே மறப்பது நன் று என்றான். ஏன் தெரியுமா? மனித மூளை ஒவ்வொரு இரவும் உறங்குகிற போது அன்றைய நாளின் ஒட்டுமொத்த நிகழ்வுகளையும் பிரித்து முக்கியமானவை, முக்கியமற்றவை என்பதற்கேற்ப தற்காலிக மற்றும் நிரந்தர
கருத்துகள்
கருத்துரையிடுக