வானமே எல்லை

பெரம்பூர் கவியரங்கம்... இலக்கியவானம் அமைப்பு நடத்திய கவியரங்கத்தில் இடம்பெற்ற நம் கவிதை..

தலைப்பு..வானமே எல்லை

ஓங்குயர் புகழ்ப்படைத்த தமிழேடுத்து நல்ல

பாங்குடை கவிசொல்ல இங்குவந்தேன்.

எல்லையிலா ஏறுபுகழ் தமிழே
உன் சொல்வாங்கி வானமே

எல்லையென்று கவிபாட எனைவாழ்த் தடி

எல்லை ஒன்று இல்லை என்று
    ஏதும் இங்கே இல்லை..
பூமியிலே மாந்தர்செய்யும்
     புதுமுயற்சிக் கெல்லாம்
பூதலத்தோர் கண்ணில்படும்
      வானமொன்றே எல்லை..

கடைக்கோ டியிலே கடலும் வானும்
   இணைவது போலே தெரிகிறது
எட்டிப் பிடித்து தொட்டிட போனால்.
   இன்னும் இன்னும் நீள்கிறது..

வானம்ஒன்று இல்லை இருந்
   தாலும் இங்கே இல்லை
இல்லாததை எல்லையாக்கி
    வெற்றி தேடி ஓடு -நீ
வானளாவு புகழ்பெறுவாய்
     வாழ்த்திடும் இந் நாடு..
     
    என்றும் அன்புடன
          உங்கள்
பாம்பன் மு பிரசாந்த்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வையத் தலைமை கொள்

புதியன விரும்பு

என்னை கவர்ந்த குறள்