இடுகைகள்

மே, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வடுக்களின் வரலாறு மின்நூல்

படம்
வடுக்களின் வரலாறு கவிதை தொகுப்பு                                                                                                   தரவிறக்குக/Download

ஸ்டெர்லைட் பாடம்

செய்தி 24 வழி வந்த ஸ்டெர்லைட் ஆலை பற்றிய குறிப்புகளைக் கீழே தருகிறேன். இதிலிருந்து நாம் பெறவேண்டிய செய்திகளைத் தருகிறேன். யோசித்து முடிவு செய்யவும். 1. பொதுவாக பொருளா...

இயற்கை ( காடு - மாத இதழுக்காக )

    ............     இயற்கை  - காடு   ............. எழிலென்றும் பொழிலென்றும் எல்லோரும் பாராட்டும் அழகொன்றே இயற்கையெனில் அதுவும் தவறு. முகில்தூவி முல்லைக்கு முகம்கழுவும் அழகியலை முழு...

மழலை

படம்
மலையளவு பொருள்சேர்த்து    மனமென்ன காணும் மழலை வானம் மட்டும்தான்   மணமகிழ்வை தூறும். விலையில்லா மதிப்பென்று     பலஉண்டு இங்கே மழலைக்கு ஈடான     மனஇன்பம் எங்கே? கள்ளச் சிரிப்பழகு.     கன்னக் குழியழகு. கண்ணை சிமிட்டியொரு     பார்வை பார்க்கையிலே என்னை இழக்க வைக்கும்     எல்லையிலா பேரழகு.. உள்ளே ஒன்றிருக்க      உரைப்பது வேறில்லை சொல்லில் பிழையானால்      அதுபோல அழகில்லை    எது மழலை என்பதற்கு    என்ன உரை உண்டு - அதில் என்போல தனித்தனியே    எல்லார்க்கும் ஒன்று. கன்னச் சதையழுந்த   சன்னல் கம்பிதேய்த்து கண்காட்டி கைகாட்டி   விடைசொல்லும் வேலையதில், வேலையென்ன?வெட்டியென்ன?   விட்டுவிட்டு ஓடிவந்து விளையாட ஓரெண்ணம்  தோன்றிடுதே - இந்த விந்தைதான் மழலைசக்தி  மரமண்டையே.!! கட்டிக் கரும்பந்த    சுட்டி குழந்தை வந்து கட்டி..அணைக்கையிலே    கல்லன்ன? மலையன்ன? கற்சிலை போல் நின்றிருப்பேன்.....

வடுக்களின் வரலாறு

#வடுக்களின்_வரலாறு . #கவிதை_வேள்வி ஆனாலும் நானென்ன அப்பாவி வாக்காளன். அதனாலே இப்போது அடங்குகிறேன் இந்த அவலத்தை நினைவூட்ட தொடங்குகிறேன். வலைப்பூ வாசிகளுக்கு வணக்கம். எனக்கு விவரம் தெரிந்த காலம் முதலாய் எந்த ஒரு கொலையோ,கற்பழிப்போ,எதுவோ நடந்தாலும் நம் சமூகம் அதை வெறும் அப்போதைய டீக்கடை பெஞ்சு தீனியாகத்தான் பார்கிறது. இன்னும்சொல்வதானால் நான் கேட்ட ஆகப்பெரிய அரசியல் தந்திரங்களும், தீர்வுகளும், நுணுக்கங்களும் நம் கிராமப்புரங்களின் டீக்கடை பெஞ்சுகளுக்கு தீர்மனங்கள்தான். இங்கே இப்போது பிரச்சனை தீர்வுகள் கிடைப்பதை பற்றி அல்ல. பெரும்பாலான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் முன் அது மறக்கடிக்கபப்டுவது தான். என் மனம் இதை வேறு தளத்தில் நின்று பார்க்கிறது. இங்கே காலச்சுழற்சியின் கட்டுக்குள் அகப்பட்டு கவனமிழக்கும் மக்களுக்கு கண்களின் முன் நின்று நினைவூட்ட ஒன்று தேவை.. இனி அதுப் என் கவிதைகளாக இருக்கும். ...