இடுகைகள்

தமிழால் இணைவோம்

படம்
18.06.17 அன்று தமிழ் இலக்கிய பூங்கா நடத்திய கவியரங்கத்தில் இடம்பெற்ற தமிழால் இணைவோம் என்ற தலைப்பிலான கவிதை.. தலைமை:பாவலர்#பாக்கம்_தமிழன் அன்னைத் தமிழே நின்னை மறக்கிலேன் ...

நல்லதே நடக்கட்டும்

படம்
11.06.2017 அன்று சென்னை எழில் இலக்கிய பேரவை நடத்திய கவியரங்கத்தில் இடம்பெற்ற நல்லதே நடக்கட்டும் என்ற தலைப்பிலான கவிதை.            நல்லதே நடக்கட்டும் எழில்மிகு சென்னை நகர...

வைரமுத்து வைரமுத்து தான்

.வாடிவாசல் திறந்துவிடும்வாழ்த்துகிறேன் தம்பி - இனிகோடிவாசல் திறக்கும்உன்கொள்கைகளை நம்பிதலைவர்களே இல்லாதகட்சியொன்று காட்டி - ஒருதலைமுறைக்கே வழிசொன்னீர்தமிழி...

எப்போது மகிழ்ச்சி

படம்
காஷ்மீரில் அமைதி வந்து கூடும்போது காவிரியும் தமிழகத்தில் ஓடும்போது இலங்கையிலே போரெல்லாம் ஓயும்போது இந்தியாவின் குழப்பமெல்லாம் மாயும்போது மீனவர்கள் நிம்மதி...

கே டி மனம் (#காத்திருப்பு)

காத்திருப்பது சுகம் என்பது முன்னோர் சொல்லி வைத்தது.அந்த சுகானுபவம் இன்று நிறைய கிடைத்தது. ஆனால் வெறுமனே காத்திருப்பது என்பதை போன்ற வெறுப்பான சுகம் வேறெதுமில்லை .இது என் அனுபவம் இன்றெனக்கு அளித்த அறிவு. வேலைகள் நிறைய நிலுவையில் மட்டுமே கிடக்க, அவற்றை பிறகுதானே செய்ய முடியும் என்கிற சமாதானத்தை தந்து என் சோம்பேறித்தனத்துக்கு இந்த காத்திருப்பும் கை கொடுக்கிறது.. ஒருவகையில் இதுகூட நல்லதுதான் போலும். வேலை இருக்கிறது வேலை இருக்கிறது என்று யாரோ சொன்ன வேலைக்காக என்னை நானே அர்ப்பணித்து கொள்வதை விடவும், வேலை இல்லை என்றால் படிக்கிறேன் பேர்வழி என்று யாரோ ஒருவர் சொன்னதை தெரிந்துகொள்ள முயற்சிப்பதை விடவும் இந்த வெறுமனே காத்திருக்கும் வேளையில் என் சிந்தை என் பார்வையில் உலகத்தை யோசிக்க தொடங்குகிறது என்பதும் லாபமாக தான் இருக்கிறது. பார்த்தீரா..என் சோம்பேறித்தனத்துக்கு  இரைபோட்டு இசைந்துகொடுக்கும் இந்த காத்திருப்புக்கு வக்காலத்து வாங்க தொடங்கிவிட்டது என் மனம்..கே டி மனதாயிற்றே...                                 ...

அழகி

படம்
அழகெனும் சொல் அது உலகினில் பிறந்தது அன்பே அன்பே உனக்காக வாழ்விலும் சரி இனி சாவிலும் சரி அடி என் காதல் என்றென்றும் உனக்காக அடி நீகூட அதுபோல எனக்காக வீண்பேச்சு விட...

பட்டாசுப் பிஞ்சு (Pattaasu pinju )

படம்
அன்னப் பருக்கைஅள்ளி உண்ணத் தொடங்குகையில் எண்ணத்தில் வந்த தந்தச் சிவகாசி சிறுவர் நிலை      கொள்ளிக் கொலைமருந்தை      அள்ளிக் கையாண்டு பள்ளிப் படிப்புவிட்டு தள்ளி நின்று வாழுகிற சுட்டிக் குழந்தைகளை கட்டிக் காப்பாற்ற – எவரோடும் முட்டிப் பயனில்லை எட்டி நோக்கினால்.....      வட்டிக் கடன் போட்ட குட்டியின் குட்டிகளை தட்டிக் கரைக்க எண்ணி கட்டித் தங்கங்களை சட்டிக் குதிரையாக்கிச் சாக்கடையில் தள்ளினரோ?? பள்ளித் தளமனைத்தும் கோயில் செய்யச் சொன்னதனை பகுத்தாய்ந்து பாராமல் பாரெங்கும் பணம் கொட்டி கோடானு கோடிகளாய் கோயில் செய்தது போதாதா? -இனி கோயிற் தளமனைத்தும் பள்ளி செய்வோம் – சிவகாசிப் பட்டாசுஆலைக்குள்ளும் துள்ளிச் செல்வோம் வாரீரோ ?? என்றும் அன்புடன் உங்கள்  முகவை மு பிரசாந்த்... இராமேஸ்வரம்