எப்போது மகிழ்ச்சி

காஷ்மீரில் அமைதி வந்து கூடும்போது

காவிரியும் தமிழகத்தில் ஓடும்போது

இலங்கையிலே போரெல்லாம் ஓயும்போது

இந்தியாவின் குழப்பமெல்லாம் மாயும்போது

மீனவர்கள் நிம்மதியை நாடும்போது

மாணவர்கள் மகிழ்ச்சியிலே ஆடும்போது

சிட்டியிலே மனிதத்தை தேடும்போது

சின்னபுத்தி இல்லாதோர் வாழும்போது

கருணை இல்லம் இல்லாமை காணும்போது

பெத்தவனை பெத்தபுள்ளை பேணும்போது

இன்னும் சொல்ல என்னென்னவோ இருக்கும்போது-பேட்டரி

சார்ஜ் இன்றி என்னுயிரை வாங்கும்போது

மொத்தமாய் ஒன்றுசொல்ல எண்ணும்போது

சத்தமில்லா தமிழகத்தை
சகநாட்டார் காணும்போது
சவகுழியில் கிடந்தாலும்
சந்தோசம் கொள்வேன் நான்.
#என்று_தணியும்

என்றும் அன்புடன்
உங்கள் மு.பிரசாந்த்
7299585174
youngerindia2020@gmail.com

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வையத் தலைமை கொள்

புதியன விரும்பு

என்னை கவர்ந்த குறள்