அழகி

அழகெனும் சொல் அது
உலகினில் பிறந்தது
அன்பே அன்பே உனக்காக

வாழ்விலும் சரி இனி
சாவிலும் சரி அடி
என் காதல் என்றென்றும் உனக்காக

அடி

நீகூட அதுபோல எனக்காக

வீண்பேச்சு விடு விடு
விரல்கொண்டு தொடு தொடு
விளையாட்டாய் வித்தைகள் செய்திடுவேன்

காச்சு மூச்சு சத்தம் விட்டு
மூச்சழுந்த முத்தமிட்டு
என் மார்பில் உன் காதல் பதித்திடுவேன்

தோள்சாய்ந்து நீ -உன்
மேல்சாய்ந்து நான் மனம்
ஏதேதோ கதைபேச எண்ணம் கொள்ளுதே

ஆனாலும் நீ எந்தன்
அருகில் வந் தால் மனம்
தட்டி தடுமாறி என்னை தள்ளுதே..

தேனாக நானிருக்க
தேன்குளவி நீயிருக்க
வீணாக எதுக்கினி வம்புவழக்கு

மானாக நீயிருக்க
மலைப்பாம்பு போல உன்ன
மனசார நா விழுங்க நேரம் ஒதுக்கு.

வேண்டாத எண்ணங்கள்
வேணாமே செல்லம்-நீ
ஓகே னு சொன்னா மனம்
உல்லாசத்தில் துள்ளும்.........
..........
......
.
.......
    ஆல்பம் ஒன்றிற்காக எழுதியுள்ளேன்..மற்றபடி எந்த நோக்கத்திலும் இட்ட பதிவு அல்ல..
ஆல்பம் வெளியான பின்பு முழு பாடலும் பதிவிடுகிறேன். நன்றி

7299585174

prasanthraman30@gmail.com

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வையத் தலைமை கொள்

புதியன விரும்பு

என்னை கவர்ந்த குறள்