புதியன விரும்பு
புதியன விரும்பு
“பழையன
கழிதலும் புதியன புகுதலும்” என்பது நன்னூல் விதி . இந்த விதியின்
பயனாக அனைவரும் எண்ணுவது பழையவைகள் அழிக்கப்பட்டு புதியவைகள் வரவேண்டும் என்பதாம்.
என்னடா இது? ஏதோ பழைய புராணம் பாடத் தொடங்குகிறானே என்று என்ன வேண்டாம். பழமையும்
புராணமும் அவ்வளவு சலிப்பு தருபவை அல்ல. நம் எட்டயபுரத்து புரட்சியாளன் பாரதி
சொன்ன அறிவுரைகளாம் புதிய ஆத்திசூடியின் அறிவுரைகளின் மொத்த கரு என்னவென்றால்
மனிதன் பழைய நிலைமாற்றி புதியதோர் மனிதனாக மாறி சமுதாய அக்கறையுடன் கூடிய வல்லவனாக
திகழ வேண்டும் என்பதாகவே இருக்கிறது]..
புதியன
விரும்பு என்பதை வெறும் வாய் வார்த்தையாக சொல்லிவிட்டு போனவனல்ல பாரதி. அதுபோல வாழ்ந்து
கட்டியவன் . பலரின் கேலிக்கு மத்தியிலே புதுகவிதை என்கிற பெருவரத்தை தற்கால இலக்கிய
உலகிற்கு அருளி செய்தான். யாப்பரியா புலவனென்று பிறர் சொன்ன போதும்கூட, இலக்கண
விதிகளுக்கு உட்பட்டு கருத்தை சிதைப்பது என்கிற பழைமையை மாற்றி கவிதை உலகிற்கு
புது இலக்கணம் படைத்து தந்தான். ஆனாலும் புதியன விரும்பிட விளைந்தானே ஒழிய பழைமையை பழித்தானில்லை
பழைமை
என்பதற்கும் புதுமை என்பதற்கும் சரியான விளக்கத்தை பாரதி சொல்லாமலில்லை.. பழைமை
என்பவை புதியவைகளை தருவிப்பவை. புதுமை என்பவை பழமையை வருவிப்பவை. எப்படியென்றால்
ஒரு புதுமை வருகிற போது பழைய செயலொன்றை புதிய விதமாக செய்யத்தான் வருகிறது. ஏற்கனவே புழக்கத்தில்
உள்ள ஒரு செயலை வேறுவிதமாக செய்து முடிக்கும் திறன் பெற்றதாய் உள்ளது. அது
செய்யவிருக்கும் செயல் ஒன்றே. ஆனால் செய்யப்போகும் விதம்தான் வேறு.அதேபோல ஒரு
பழமையை எடுத்துகொள்வோம். புதுமை தருகிற பயனை காட்டிலும் சிறந்த முறையில் அதே பயனை
தரவல்லதாக உள்ளது என்பது உண்மை.இதில் மற்றுமொருவேடிக்கையான சிறப்பு என்னவென்றால், என்னதான்
புதுமைக்கு ஏற்றதாக நம் வாழ்கை முறை பழகி விட்டாலும் பழமை தருகிற பயனைத்தான் மனம்
விரும்புகிறது. இந்த உளவியல் ரீதியான விருப்பத்தை புரிந்துகொண்டிருந்ததால் தன
பாரதி புதுமை உண்டாக்கு என்றோ, புதுமை படை என்றோ, புதியன செய் என்றோ
சொல்லாமல் புதியன விரும்பு என்றிருக்கிறான்.
புதுமை
என்றாலே பழமையை புறக்கணிப்பது என்றும்,புதுமை என்றாலே பழமையை ஏற்காமல் இருப்பது
என்றும் தவறான கணிப்பும் கண்ணோட்டமும் இன்றைய சமுதாயத்தில் இருந்து வருவது உண்மை.
புதுமை என்பது பழமைக்கு பழமையாய் புதுமைக்கு புதுமையுமாய் விளங்குவது. அப்படி
விளங்கும் ஒன்றே இன்றைய நவநாகரீக உலகத்தில் தன்னை நிலைநிறுத்தி கொண்டு,இந்த
உலகமயமாக்கலுக்கு தாக்குபிடித்து நிற்பவைகளாக இருக்க முடியும்.உலகத்தோர்
பார்வையில் பாரதம் உயர்ந்து விளங்குவதற்கு, இனி வரவிருக்கும் புதுமைகள் நம்
பழமையான தொன்மை சிறப்பை குலைத்து விடுவதாய் இல்லாமல் அதே சமயம் நம் தொன்மையை
பிறருக்கு பறைசாற்றும் வகையினதாய் நவீனம் கலந்து உலக நாடுகளின் பார்வையில் புதியதோர்
தனி பாணியை பாரதத்துக்கென படைத்துவிடுவனவாய் இருக்க வேண்டும்.அதுதான் ஒரு புதியன
விரும்பியின் பாணியும் கூட.
சரி..இந்த விடயம் பாரதிக்கு தெரிந்தால் உன்னை என்ன செய்வான்
தெரியுமா? என்கிற உங்கள் மானசீகமான கேள்வி புரிகிறது.பாரதி இதை அறிந்தால்
மகிழ்ந்து போவான்.உண்மையில் இத நீங்கள் படித்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில்
பாரதியின் ஆன்மா நிச்சயம் நெகிழ்ந்து கொண்டிருக்கும்..நான் நினைத்ததை மக்கள்
மத்தியில் பரப்புவதற்கு இந்த இந்த கிறுக்கனின் எழுதும் ஒரு கருவியாய் அமைகிறதே
என்றும் அதை நீங்கள் வாசிப்பதை கண்டும். அப்படியெல்லாம் இருக்காது நீயாக புதிது
புதிதாக எதையாவது சொல்லாதே என்கிறீர்களா.. சரி இருக்கட்டும் இதுவும் புதுமை தானே.
(#புதியன_விரும்பு). ஆனால் ஒன்று நிச்சயம் . பாரதியை பின்பற்றும் ஒருவன் மட்டுமே
சமுகத்தில் நல்லவனாகவும், வல்லவனாகவும் விளங்க முடியும். பழமை கூறும் அனைத்தையும் அப்படியே
ஏற்காமல் புதுமை புகுத்தி உலகதிர்கேற்ப வழங்கினான், அதுபோலவே அதனை அடியொற்றி
நாமும், நடந்துகொண்டிருக்கும் உலகமயமக்கலாலும் (glovbalization) நவநாகரிகமென்ற
போர்வைக்குள் புகுந்து புதுமைக்கு புதுஅர்த்தம் பண்ணிக்கொண்டு மடைமாற்றம் அடைந்துவிடாமல் இன்ற மாற்றமென்ற பேரில்
மதியிழந்து திரியும் கூட்டத்தை மாற்றி நல்வழியில் இட்டுச்செல்வதாக நம் புதுமை மாயா
வேண்டும்
புதுமாற்றம் மாற்றமென்று
புத்திகெட்ட
கூட்டமொன்று
புவிமிசையே வாழு தவர்
புதியன
விரும்பி அல்ல
பொழுது போக்கு விரும்பிகள்
-நெய்தலான்
அப்படியாகிய பொழுது போக்கு விரும்பிகளாக அல்லாமல் புதியன
விரும்பிகளாய் புவிமேல் வளம் வருவோமாக.
என்றும்
அன்புடன்
உங்கள்
பாம்பன்.மு.பிரசாந்த்
கருத்துகள்
கருத்துரையிடுக